ஏற்காடு பஸ் விபத்துக்கு என்ன காரணம்?

67பார்த்தது
ஏற்காடு பஸ் விபத்துக்கு என்ன காரணம்?
சேலம் ஏற்காட்டில் நேற்று தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் 11ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு அதிவேகமாக சென்றதே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. மலைப்பகுதிகளில் 30 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக செல்ல வேண்டிய நிலையில் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கும் மேல் சென்றதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி