இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 527 பொருட்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளது. செப் 2020 முதல் ஏப் 2024 வரை இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலின் ஆக்சைடு அதிகமாக இருப்பதை ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் (EFSA) கண்டுபிடித்துள்ளது. எனவே 313 வகை நட்ஸ்கள், 60 மூலிகைகள், 48 சத்துணவுகள், 34 இதர உணவுகளை ஐரோப்பியாவில் தடை செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து வந்த 87 கண்டெய்னர்களையும் திருப்பி அனுப்பி உள்ளது.