தமிழ் சினிமாவில் தனக்கென தனி வழியை உருவாக்கிய தன்னிகரில்லா நாயகன் அஜித்குமார் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகிலும் மக்கள் மனங்களிலும் இடம் பிடிப்பது அவ்வளவு சாதாரணமில்லை, அதை சாத்தியமாக்கியவர் அவர். எவரும் கைதூக்கிவிடவில்லை. தானாகவே தன்னை முட்டிமோதிக்கொண்டு, பூமியில் இருந்து வந்த சுயம்புவாக ஒளிர்ந்து நிற்கிறார் அஜித். தன்னம்பிக்கையும் திறமையும் உழைப்பும் இருந்தால் உச்சம் தொடலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக திகழ்கிறார்.