விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி -அருப்புக்கோட்டை சாலையில் செண்டர் மீடியம் மற்றும் சாலை ஓரங்களில் அதிக அளவில் மணல் குவியல்கள் உள்ளது. காரியாபட்டிக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கிறது. இந்த சாலையோர மணல் குவியலால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கண்ணில் பட்டு விபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது. சாலை ஓர மணல் குவியல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.