இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப் பாலம்!

74பார்த்தது
ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில் ₹550 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள இரட்டை வழித்தட மின்சார ரயில் பாலத்தில், இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சோதனை ஓட்டத்திற்கு தயார் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. கப்பல் கடந்து செல்லும் கால்வாய் மேல் சுமார் 700 டன் எடையில் பொருத்தப்பட்டுள்ள இந்தியாவின் முதல் செங்குத்து தூக்குப்பாலத்தில் லிப்டிங் சோதனை நேற்று மாலை நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி 15 மீட்டர் உயரம் வரை தூக்கி சோதனை செய்தனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி