ஸ்ரீவில்லிபுத்துார்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது

62பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 2 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மதுரை ரோட்டி இருக்கும் திருமண மண்டப நிறுத்தத்தில் வைத்து தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கேரளா மற்றும் பிற மாநில சீட்டுகள், ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேற்படி தகவல் அடிப்படையில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் சோதனை செய்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் செக்கடி தெருவை சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா, மற்றும் பல மாநில லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தன. மேலும் விற்பனைக்கு வைத்திருந்த லாட்டரி சீட்டுகள் மற்றும் ரொக்கம் பணம் 4000/- கைப்பற்றிய போலீஸார் இருவர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி