ஸ்ரீவி: பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய ஊர் பொதுமக்கள்...

68பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் மேல தாளங்கள் முழங்க அரசுப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் சுமார் 138 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் வத்திராயிருப்பைச் சேர்ந்த முருகக்கனி என்பவர் சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் பீரோல், டேபிள் , சேர் உள்ளிட்டவைகளை கோட்டையூர் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளிக்கு ஊர்மக்களுடன் இணைந்து கல்வி சீராக வழங்கினார்.
முன்னதாக இந்த கல்விச் சீரை கோட்டையூர் பகுதியில் முக்கிய வீதியில் வழியாக அப்பகுதி மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று பின்பு அரசு பள்ளிக்கு மேலதாளங்கள் முழங்க கல்வி சீரானது கொண்டுவரப்பட்டு பள்ளி ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பள்ளியின் சார்பில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி