ஸ்ரீவி: மூதாட்டிக்கு குளிர்பானம் கொடுத்து 2 சவரன் திருட்டு...

68பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் குளிர் பானத்தில் மது கலந்து கொடுத்து மூதாட்டியிடம் செயின் திருட்டு. திருட்டில் ஈடுபட்ட கணவன், மனைவி கைது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி விலக்கு இனாம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 74). இவர் வீட்டுக்குள் இருந்த இரும்பு பெட்டியில் இருந்து 2 பவுன் தங்கச்செயின் காணவில்லை. இதுகுறித்து மூதாட்டி வேலம்மாள் வன்னியம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். போலீஸாரின் தீவிர விசாரணையில், உறவினேரே மூதாட்டி வேலம்மாளிடம் இருந்து நகைகளை திருடியது தெரிய வந்தது‌. இதுதொடர்பாக, வன்னியம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில் உறவினர் என கூறிக்கொண்டு வேலம்மாள் பாட்டியின் வீட்டிற்கு வந்த தம்பதிகள், சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார் இவரது மனைவி பேச்சியம்மாள் ஆகிய இருவரும் சேர்ந்து, குளிர்பானத்தில் மதுவை கலந்து மூதாட்டி வேலம்மாளை குடிக்க வைத்து மயக்கமடைய செய்தனர். பின்னர் வீட்டிலிருந்த இரும்பு பெட்டியை திறந்து அதிலிருந்த சுமார் 2 பவுன் தங்க செயினை திருடிசென்றுது விசாரணையில் தெரியவந்தது. மேலும் தளவாய்புரத்தில் தலைமறைவாக இருந்த பேச்சியம்மாள், கணவர் ஜெயக்குமாரை கைது செய்து, 16 கிராம் தங்க செயின் பறிமுதல் செய்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி