திருச்சியில் தனியாக கழன்று ஓடிய ரயில் பெட்டிகள்.! (வீடியோ)

83பார்த்தது
ராமேஸ்வரத்திலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் இன்று (செப்.18) அதிகாலை 1:10 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. அப்போது டிரைவர் ரயிலை நிறுத்த முயன்ற போது கடைசி 3 பெட்டிகள் தனியாக கழன்று ஓடியது. அதிர்ஷ்டவசமாக பெட்டிகள் தடம் புரளவில்லை. இதனால் பயணிகள் உயிர் தப்பினர். அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பொறியாளர்கள் விரைந்து வந்து ரயில் பெட்டிகளை இணைத்தனர். பின்னர் அரை மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

தொடர்புடைய செய்தி