14 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மிதமான மழை

84பார்த்தது
14 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மிதமான மழை
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி