தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை

82பார்த்தது
தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை
தவெக மாநாட்டில் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை என அக்கட்சியில் பொதுச்செயலாளர் என். ஆனந்த் கூறியுள்ளார். மேலும் மாநாட்டில் ஆண்கள் - 30,000, பெண்கள் - 15,000, முதியோர்கள் - 5,000 மாற்றுத்திறனாளிகள் 500 பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள் என கூறியுள்ளார். விக்கிரவாண்டியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடத்த போலீசாரின் அனுமதி கேட்டபோது, 21 கேள்விகள் கேட்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பதில் அறிக்கையை சமர்பித்த பிறகு என். ஆனந்த் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி