சர்ச்சை பேச்சாளர் மஹாவிஷ்ணு தலைமறைவு

75பார்த்தது
சர்ச்சை பேச்சாளர் மஹாவிஷ்ணு தலைமறைவு
சென்னையில் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சாளர் மஹாவிஷ்ணு தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. சென்னை அசோக் நகர் மேல்நிலைப் பள்ளியில் மஹாவிஷ்ணு பேசியது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நேரில் விசாரணை நடத்தினார். 3 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே, மஹாவிஷ்ணுவின் தொலைபேசி ஆஃப் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி