சிவகாசி: முன் விரோதமாக தாக்குதல். 4 பேர் மீது வழக்கு பதிவு...

55பார்த்தது
சிவகாசி அருகே வாலிபர் மீது தாக்குதல். 4பேர் மீது வழக்கு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே மீனம்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி
மகன் விஜய் (24). இவரது தங்கையும், அதே பகுதியை சேர்ந்த திலீபன் என்பவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து
கொண்டனர். இந்நிலையில் கணவன்,. மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை
காரணமாக காதல் தம்பதி சிவகாசி அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் புகார்
கொடுத்தனர். விசாரணையின் முடிவில் காதல் தம்பதி பிரிந்து வாழ முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் திலிபன் மற்றும் அவரது உறவினர்கள் சின்னப்பராஜ், பாண்டி, திவாகர், ஆகியோர் முன் விரோதம் காரணமாக வாலிபர்
விஜயை தாக்கியுள்ளனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி