சிவகாசி: புதிய அங்கன்வாடி மையம் திறப்பு...

85பார்த்தது
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் ஊராட்சியில் அங்கன்வாடி மையங்கள் திறப்பு
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சியில் 2 புதிய அங்கன்வாடி மையங்களை ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜ் நேற்று திறந்து வைத்தார். சிவகாசி அருகே அனுப்பன்குளம் ஊராட்சிக்குட்பட அனுப்பன்குளத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ. 9லட்சத்து 8 ஆயிரம் மதிப்பீட்டிலும் பேராபட்டியில் அணைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ. 13லட்சத்து 57ஆயிரம் மதிப்பீட்டிலும் புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய அங்கன்வாடி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. அனுப்பன்குளம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதாபாண்டியராஜ் கலந்து கொண்டு அங்கன்வாடி மையங்களை பள்ளி குழந்தைகள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீரலட்சுமி, மேற்பார்வையாளர் முத்துமாரி, ஊராட்சி செயலர் சத்யாதேவி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி