சென்னை, சைதாப்பேட்டையில் இயங்கி வந்த இறைச்சிக் கடை குடோனில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆயிரக்கணக்கான கெட்டுப்போன ஆட்டுக்கால்கள் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 600 முதல் 700 கிலோ ஆட்டுக்கால்கள் இருந்துள்ளன. இதனை அடுத்து அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.