சிவகாசி: கொலை குற்றவாளி உயிரிழப்பு...

82பார்த்தது
சிவகாசியில் போதைக்கு அடிமையாகி துன்புறுத்திய மகனை கொலை செய்த தந்தை உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லை சேர்ந்த ஓய்வு பெற்ற வேளாண் துறை ஊழியரான ராமசாமியின் 74, இவரது மகன் சுப்பிரமணி மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் பெற்றோரிடம் தினமும் மது அருந்த 600 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு முதிர்ந்த பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். வயது முதிர்ந்த ராமசாமிக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட பல்வேறு வியாதிகள் இருந்துள்ளது. அதோடு மகனின் தொந்தரவையும் தாங்க முடியாமல் செய்கை தெரியாது திகைத்து வந்த அவர் மகனை கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில் கடந்த அக். 1 ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மகன் சுப்பிரமணியை கட்டையால் தாக்கி கொலை செய்தார். மேலும் கொலை செய்த தந்தை ராமசாமியை கைது செய்த திருத்தங்கல் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவருக்கு உடல் நலக்குறைவு இருந்ததன் காரணமாக மதுரை அரசு மருத்துவமனை சிறைவாசிகளுக்கான சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகனின் தொந்தரவிலிருந்து விடுபட அவரை கொலை தந்தை நோயின் பிடியிலிருந்து விடுபட முடியாமல் உயிரிழந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி