சிவகாசி: மது போதையில் 2 பேர் மண்டை உடைப்பு. போலீஸ் விசாரணை...

52பார்த்தது
சிவகாசி: குடிபோதையில் தகராறு. 2 வாலிபர்களுக்கு மண்டை உடைப்பு.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி அருகே எம். புதுப்பட்டி செவலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (27), இவரது நண்பர்கள் முத்து, சந்திரசேகர், பாண்டி, மாரியப்பன், கிருஷ்ணன் ஆகியோர் செவலூரில் உள்ள
ரேசன் கடை அருகில் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். இதில் போதை அதிகமான
நிலையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் பாண்டி, மாரியப்பன், கிருஷ்ணன் ஆகியோர் பீர் பாட்டிலால் ரமேஷ், முத்து அகியோரை தாக்கியதாக
கூறப்படுகிறது. இதில் 2 பேருக்கும் மண்டை உடைந்தது. பலத்த காயமடைந்த 2
பேரும் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் சந்திரசேகர் உள்பட 4 பேர்
மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே சம்பவம்
தொடர்பாக சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ரமேஷ், திருப்பதி, முத்து ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை
நடத்தி வருகிறார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி