சாத்தூர்: விதிகள்மீற பட்டாசுகள் தயாரித்த 2 பேர் கைது....

85பார்த்தது
சாத்துார் அருகே பட்டாசு கடையில் விதிகள்மீறி சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்த 2 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே உள்ள
மேட்டமலை பகுதியில் இயங்கி வரும் விமல் பட்டாசு ஆலை அருகே செயல்பட்டு வரும் அனுப்பகுளத்தை சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கு சொந்தமான பொன்மதிஸ்ரீ பட்டாசு கடையில் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட குளோரைடு என்ற வேதிப்பொருளை கொண்டு செய்யப்பட்ட அடியாள் வெடி இருப்பு வைத்து, விற்பனை செய்யப்படுவதாக சாத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு வந்த ரகசிய தகவல் வந்தன. மேலும் தகவலின் அடிப்படையில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் கடையில் சோதனை செய்தனர். அப்போது மத்திய அரசால் தடை செய்யப்பட்ட குளோரைடு என்ற வேதிப்பொருள் தயார் செய்த அடியாள் வெடியை பறிமுதல் செயதனர். மேலும் பட்டாசு கடையின் உரிமையாளர் பொன்ராஜ் மற்றும் மீனம்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜேசுராஜ் ஆகிய இருவர் மீது சாத்துார் நகர் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி