பெங்களூரு கட்டிட விபத்து - பலி 8ஆக உயர்வு

64பார்த்தது
பெங்களூரு கட்டிட விபத்து - பலி 8ஆக உயர்வு
பெங்களூருவில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. பாபுசபாளையத்தில் கட்டப்பட்டுவந்த 6 மாடி கட்டிடம் கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. சோஹித் பாஸ்வான் என்ற புலம்பெயர் தொழிலாளியின் உடல் மீட்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு 8ஆக அதிகரித்துள்ளது. கட்டட உரிமையாளரின் மகன் மோகனை போலீசார் கைது செய்துள்ளனர். கட்டட உரிமையாளர் முனிராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி