“மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்” - நீதிபதிகள் காட்டம்

50பார்த்தது
“மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்” - நீதிபதிகள் காட்டம்
மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் கழிவுநீர் கால்வாய்களை அமைக்கக்கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்த விசாரணையில், "எவ்வளவு மழை பெய்தாலும் மருத்துவமனையில் தண்ணீர் எங்கேயும் தேங்கக்கூடாது. இல்லை என்றால், மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்" என நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி ஆகியோர் காட்டம் தெரிவித்தனர். மேலும், வழக்கு தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவமனை டீன் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி