சாத்துார்: பட்டாசு ஆலை சீலை உடைத்து பட்டாசு தயாரித்தவர் கைது.

65பார்த்தது
சாத்தூர் அருகே சீல் வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தவர் கைது. பட்டாசுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெம்பக்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான சண்முக பயர் ஒர்க்ஸ் இயங்கி வந்தன. தற்போது இந்த பட்டாசு ஆலை கடந்த சில மாதங்களுக்கு முன் விதிமீறல்கள் என்ற காரணத்தால் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறை துணையோடு சீல் வைத்து பட்டாசு ஆலையை தற்காலிக உரிமைத்தை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு வழங்கியது. மேலும் இந்த பட்டாசு ஆலையின் சீலை உடைத்து சட்டவிரோதமாக ஆலை உரிமையாளர் பாண்டியராஜ் மற்றும் தொழிலாளர்களுடன் பட்டாசுகள் தயார் செய்வதாக ரகசிய தகவல் வந்தன. மேலும் தகவலின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீஸார் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை உடைத்து பட்டாசுகள் தயார் செய்வது கண்டறியப்பட்டன. உடனடியாக ஆலையின் உரிமையாளர் பாண்டியராஜ் கைது செய்து, தயார் செய்து வைத்திருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் காவல நிலைய ஆய்வாளர் சங்கர் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியராஜ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி