சாத்துார்: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது...

64பார்த்தது
சாத்துார் அருகே மரத்தடியில் பட்டாசுகள் தயார் செய்த ஆலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது.
விருதுநகர் மாவட்டம்,
சாத்துார் அருகே உள்ள வெம்பக்கோட்டை காவல் சரக உட்கோட்டத்திற்கு உட்பட்ட இனாம் மீனாட்சிபுரத்தில் ராமகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீமகேஸ்வரன் பட்டாசு ஆலை வளாகத்தில் உள்ளே சட்டவிரோதமாக மரத்தடியில் 3 தொழிலாளர்கள் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயார் செய்து கொண்டிருந்தன. அப்போது செவல்பட்டி வருவாய் கோட்ட கிராம நிர்வாக அலுவலர் வெள்ளைபாண்டியன் பட்டாசு ஆலையை ஆய்வு செய்தனர். அப்போது மரத்தடியில் வைத்து ஆலை உரிமையாளர் ராமகிருஷ்ணன், சித்துராஜபுரம் பகுதியை சேர்ந்த சுடலை, மற்றும் சாத்தூரை சேர்ந்த ஆறுமுகம் ஆகிய மூன்று பேரும் பேன்சி ரகம் மற்றும் பல தரப்பட்ட பட்டாசுகள் சட்டவிரோதமாக தயார் செய்தது கண்டறியப்பட்டன. மேலும் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் செவல்பட்டி கிராம நிர்வா அலுவலர் வெள்ளை பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் ஆலை உரிமையாளர் உள்பட மூன்று பேரை கைது செய்த போலீஸார் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி