ரயில்வே சுரங்கப்பாதை பணியை தொடங்க வலியுறுத்தல்

71பார்த்தது
ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை பணியை விரைவில் தொடங்க வேண்டும், என ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை

தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தில், ராஜபாளையம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். அம்ருத் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ராஜபாளையம் - சங்கரன்கோவில் இடையே சோழபுரம் அல்லது கரிவலம்வந்தநல்லூரில் ரயில் நிலையம் அமைக்க வேண்டும். செங்கோட்டை-மயிலாடுதுறை ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். சிலம்பு ரயிலை தினசரி இயக்க வேண்டும். ராஜபாளையம் வழியாக வைகை ரயிலுக்கு இணைப்பு ரயில், திருப்பூர், பெங்களூருவுக்கு தினசரி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி