இராஜபாளையம்: மனைவி கள்ள காதல் விவகாரம்;கணவன் வெட்டிக் கொலை...

70பார்த்தது
இராஜபாளையத்தில் அதிகாலை பயங்கரம்: மனைவி கள்ளகாதல் விவகாரம்;கணவன் வெட்டிக் படுக்கொலை.
விருதுநகர் மாவட்டம்,
ராஜபாளையம் ஓடைப்பட்டி தெருவை சேர்ந்தவர் ராம்குமார்(33)
பால் வியாபாரம் செய்துவந்தார். இவரது மனைவி சந்தனமாரி(28)
இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ராம்குமார் தனது உறவினரான காளிராஜ்(25) எனபவரை தனது வியாபாரத்துக்கு உதவியாக வேலைக்கு வைத்துக் கொண்டார். அந்த சமயத்தில் காளிராஜ் மற்றும் சந்தனமாரி இருவருக்கும் கள்ள உறவு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவரும் தலைமறைவு ஆகிவிட்டனர். இரண்டு ஆண்டுகாலம் பல இடங்களில் வசித்து ஒரு குழந்தையும் பெற்றுக்கொண்ட நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜபாளையம் வந்துள்ளதாக கூறப்படுகிறது, காளிராஜிடம் ராம்குமார் தனது மனைவிடம் உள்ள கள்ள உறவை விடு என்று கூறி உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த காளிராஜ் இன்று அதிகாலை ராம்குமாரை, காளிராஜ், அரிவாளால் சராமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளார். இச்சம்பவம் குறித்து வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் படுகொலை செய்த ராம்குமார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூர்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான குற்றவாளி காளிராஜை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி