இராஜபாளையம்: தமிழகம் இருண்டு கிடைக்கிறது- முன்னாள் அமைச்சர்..

52பார்த்தது
தமிழகம் முழுவதும் இருண்டு கிடக்கிறது என
இராஜபாளையத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்
கே. டி. இராஜேந்திரபாலாஜி குற்றசாட்டு.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது: மக்கள் பிரச்சனைகளை முடிக்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு போராட வேண்டும். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி கோட்டைக்கு போகிறார். ஸ்டாலின் வீட்டுக்கு போகிறார் என்றார், திமுக ஆட்சிக்கு வந்த முதல் அரச கடத்தப்படுவதாக விமர்சனம் செய்தார். மேலும் டீக்கடையில் உட்கார்ந்து இருப்பவர்களிடம் திமுக ஆட்சியில் மக்கள் கஷ்டப்படும் பிரச்சினைகள் பற்றி பேசுங்கள் என்றார் மக்களை பாதிக்காத வகையில் ஆட்சி தந்தது அதிமுக. காலத்தை கடத்தும் ஆட்சி கொடுத்துக் கொண்டி இருப்பது திமுக, வாக்களித்த திமுகவினரே திமுக ஆட்சி எப்போது முடியும் என காத்திருப்பதாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் சோறு பொங்க அரிசி இல்லை, குழம்பு வைக்க பருப்பு இல்லை, தமிழகம் முழுவதும் இருண்டு கிடக்கிறது.
விலைவாசி ராக்கெட் வேகத்தில் கூடி, மின் கட்டண உயர்வு ஷாக் அடிக்குது. தமிழகத்தில் யாரும் சுபிட்சமாக சுகமாக வாழ வில்லை, நாம் அனைவரும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய சூளுரைத்து சபதம் ஏற்போம் என்றார். கூட்டத்திற்கு நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி