28 ஊழியர்களுக்கு கார் பரிசு வழங்கிய முதலாளி

65பார்த்தது
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார் மற்றும் பைக் பரிசாக வழங்கியுள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் கண்ணன் கூறுகையில், நிறுவனத்தின் வளர்ச்சிக்கு 9 ஆண்டுகளுக்கு மேல் பெரும் பங்காற்றிய 28 பணியாளர்களுக்கு கார் பரிசும், 7 வருடம் பணியாற்றியவர்களுக்கு பைக் பரிசும் வழங்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். பணியாளர்கள்தான் எங்கள் சொத்து எனக்கூறிய அவர் இதுவரை 30 பேருக்கு கார் வழங்கியுள்ளதாக கூறியுள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி