இராஜபாளையம்: நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது..

64பார்த்தது
இராஜபாளையம் அருகே நம்பர் லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது. லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் வட்டம், தளவாய்புரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட முகவூர் அருகே உள்ள கிருஷ்ணா தியேட்டர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரிகள் மற்றும் வெளி மாநில லாட்டரிகள் விற்பனை செய்யபடுவதாக தகவல் வந்தன. மேலும் தகவலின் பேரில் தளவாய்புரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் செல்வம் தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது முகவூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த அன்பழகன் சந்தேகம் படி நின்று கொண்டிருந்தார். அவரிடம் போலீஸார் விசாரணை மற்றும் சோதனை செய்யப்பட்டதில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த ஒரு நம்பர் லாட்டரி மற்றும் வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து தளவாய்புரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி