இராஜபாளையம்: கஞ்சா விற்பனை செய்தவர் கைது...

85பார்த்தது
இராஜபாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது. 25 கிராம் கஞ்சா பறிமுதல்.
விருதுநகர் மாவட்டம்,
இராஜபாளையம் வட்டம், சேத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஜீவா நகர் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சேத்தூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தன. மேற்படி தகவலின் அடிப்படையில் காவல் நிலைய சார் ஆய்வாளர் மனோகரன் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது செட்டியார்பட்டியை சேர்ந்த
ஐவரமத்து என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தன. மேலும் அவரை சோதனை செய்த போலீஸார் அவரிடமிருந்து 25 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து சேத்துார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி