ரூ.90,000-க்கு ஏலம் போன ஜல்லிக்கட்டு காளை!

73பார்த்தது
ரூ.90,000-க்கு ஏலம் போன ஜல்லிக்கட்டு காளை!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த உடையாபட்டியைச் சேர்ந்த சுப்பாயி என்பவரின் ஜல்லிக்கட்டு காளை ரூ.90,000-க்கு ஏலம் போயுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் இந்த காளை களத்தில் வீரர்களை பந்தாடி கலக்கி வருவதால் இதனை ஏலத்தில் எடுக்க பலரும் போட்டி போட்டனர். பின் கல்கொத்தனூரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் காளையை ஏலத்தில் வாங்கினார். இந்நிலையில், காளையை விற்ற தொகையில் அந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்க சுப்பாயி முடிவு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி