மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுரை

51பார்த்தது
மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வியாபாரிகளுக்கு அறிவுரை
அருப்புக்கோட்டை நகராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க நகராட்சி சுகாதாரதுறை அதிகாரிகள் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று ரயில்வே பீடர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து முற்றிலும் மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்துமாறு வியாபாரிகளை அறிவுறுத்தி மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் அபராத விதிக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்தனர். இதில் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி