விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவில் அன்னியூர் சிவா போட்டி

63பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவில் அன்னியூர் சிவா போட்டி
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் ஜூன் 21-ம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24-ம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 -ம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஜூலை 10 -ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று விக்கிரவாண்டி இடைதேர்தலில் அன்னியூர் சிவாவை திமுக வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது. 1971-ம் ஆண்டு, ஏப்ரல் 3-ம் தேதி பிறந்த அன்னியூர் சிவா, பி. ஏ. , வரை படித்துள்ளார். 1987-ம் ஆண்டு திமுகவில் இணைந்து, 1989-ல் இளைஞர் அணி துணை அமைப்பாளராகவும், 1996-ம் ஆண்டு அன்னியூ கூட்டுறவு வங்கித் தலைவராகவும், 2002-ம் ஆண்டு ஒன்றுபட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்குழு உறுப்பினராகவும், 2020-ம் ஆண்டு மாநில விவசாய அணி துணை அமைப்பாளராகவும், தற்போது விவசாய தொழிலாளர் அணி செயலாளர் பொறுப்பிலும் உள்ளார். இவர் எந்த தேர்தலிலும் போட்டியிடாமல், நேரடியாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

தொடர்புடைய செய்தி