நீட் முறைகேடு வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு

79பார்த்தது
நீட் முறைகேடு வழக்கு- விசாரணை ஒத்திவைப்பு
நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. திங்களன்று வழக்கில் ஆஜராக இயலாது என்பதால் ஒத்திவைக்க வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை வைத்தார். இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கோரிக்கையை அடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு வழக்கு விசாரணையை ஜூலை 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.