மகன் கண் முன்னே உயிரிழந்த தந்தை

50பார்த்தது
மகன் கண் முன்னே உயிரிழந்த தந்தை
தர்மபுரி அருகே உள்ள மான்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்த சின்னசாமி(36) இவர் இன்று தனது மகனை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துசென்றுள்ளார். அப்போது செல்லும் வழியில் மகன் ஜாமின்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டுள்ளார். அதனை வாங்க சோலைகொட்டாய் பகுதியில் உள்ள மெயின் ரோடு ஓரத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சாலையை கடக்க நடைமேடையில் நின்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் நின்றிருந்த சின்னசாமி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் சம்பவ இடத்திலேயே மகன் கண்முன்னே தந்தை சின்னசாமி உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி