இரட்டணை கோவிலில் அக்னி வசந்த விழா

57பார்த்தது
மயிலம் அடுத்த இரட்டணை திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த பெருவிழாவின் எட்டாம் நாள் உற்சவம் நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் அருள்மிகு திரவுபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த பெருவிழாவின் முதலாவது நாள் துவஜாரோகனம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. எட்டாம் நாள் நிகழ்ச்சியில் இடும்பன் வதையும், இடும்பி குறியும் என்ற ஆன்மீக சொற்பொழிவும், நாடகமும் நடைபெற்றது. இரவு தர்மராஜர், திரவுபதி அம்மன் உள்ளிட்ட சுவாமிகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா காட்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி