சென்னை கிண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் அவர், 'கடந்த 3 ஆண்டுகளாக தமிழக நல்வாழ்வுத்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக டெங்கு உயிரிழப்புகள் படிப்படியாக குறைந்திருக்கிறது. இந்த ஓராண்டு முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு உடனடியாக மருத்துவரை அணுகாமல், தன்னிச்சையாக மருத்துவம் செய்துகொண்டதால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்' என்றார்.