முதியவருக்கு உதவி செய்த காவலருக்கு "சல்யூட் "

1033பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சாப்பிடாமலும் ஆதரவின்றியும் முதியவர் ஒருவர் கிடந்துள்ளார்.

இந்த முதியவரிடம் மயிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சங்கரன் மனிதாபிமானத்துடன் அந்த முதியவரிடம் விசாரணை மேற்கொண்டார். அதில், அந்த முதியவர் சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்த சின்னபையன் என்பதும் அவரது மகன் பெயர் முருகன் என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து சங்கரன், அந்த முதியவருக்கு டீ வாங்கி கொடுத்ததுடன் அவர் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்தார். மேலும் சங்கரன் ஆத்தூர் பகுதியில் உள்ள தன்னுடன் பணிபுரிந்த சக காவலர்களை தொடர்பு கொண்டு அவரது விபரங்களை சேகரித்து முதியவரின் உறவினர்களிடம் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

அந்தக் கருணை உள்ள காவலரை இருகரம் கூப்பி நன்றி உணர்வோடு முதியவர் விடை பெற்று சென்றார். காவலர் சங்கரனின் இந்த செயல் பொதுமக்களிடையே மிகுந்த பாராட்டினையும் வரவேற்பினையும் பெற்றது.

தொடர்புடைய செய்தி