காதல் தோல்வியில் ஆண் தற்கொலை செய்வதற்கு பெண்ணை பொறுப்பாக்க முடியாது என நீதிமன்றம் கூறியுள்ளது. உடைந்த, பலவீனமான மனநிலையில் எடுக்கும் தற்கொலை முடிவுக்கு மற்றொருவரை எப்படி குற்றம் சொல்லலாம்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளது. மகன் காதலித்த பெண்ணும், மற்றொரு நபரும் நெருங்கிய உறவில் இருந்ததால் மகன் தற்கொலை செய்ததாக, தந்தை ஒருவர் அளித்த புகாரில் அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து நடந்த விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றம் இருவருக்கும் ஜாமின் வழங்கி இந்த கருத்தை தெரிவித்துள்ளது.