வேலூர் சாய்நாதபுரத்தை சேர்ந்தவர் தாமு (25). வேலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் அதேப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனை இளம் பெண்ணின் பெற்றோர் கண்டித்தனர். இந்த நிலையில் தாமு மது போதையில் இளம்பெண்ணின் தாயார் நடத்தி வரும் காய்கறி கடைக்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் கத்தியால் இளம் பெண் தாயின் தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமுவை கைது செய்தனர்.