சென்னையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் மனைவி ஷர்மிளா தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதை அமைப்பைச் சேர்ந்த வருண் கூறும்போது, “எங்கள் அமைப்பினர் சட்ட ரீதியாக ஷர்மிளாவுக்கு உதவினர். பள்ளிக்கரணை போலீஸார் தொடர்ச்சியாக ஆணவக்கொலை வழக்கில் கொலையாளிகளுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற மன உளைச்சலில் இருந்த நிலையில் தான் ஷர்மிளா தற்கொலை செய்துக் கொண்டார்" என கூறினார்.