துணைவேந்தர் விவகாரம் - உயர்நீதிமன்றம் வேதனை

58பார்த்தது
துணைவேந்தர் விவகாரம் - உயர்நீதிமன்றம் வேதனை
கடந்த ஓராண்டாக சென்னை பல்கலைக்கழகம் துணைவேந்தர் இல்லாமல் செயல்படுவது மோசமான நிலை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அதிகார அமைப்புகளுக்கு இடையிலான பிரச்சினை காரணமாக கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழு நியமனத்தை எதிர்த்த வழக்கில் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களை நிர்வாகிக்கும் அதிகார அமைப்புகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி