தபால் நிலையத்தில் அதிகாரிகள் இல்லாததால் மக்கள் அவதி

51பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகைக்கடை பஜார் பகுதியில் இயங்கி வரக்கூடிய தபால் நிலையத்தில் மாதம் தோறும் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும் தொகையை எடுக்க ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் செல்கின்றனர்.

இந்நிலையில் அதில் பணியாற்றி வரக்கூடிய அதிகாரி இரண்டு நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ளதால் பொதுமக்கள் தினமும் தங்கள் வேலைகளை விட்டு அலைந்து திரிந்து வருகின்றனர். அதை எடுத்து தருவதற்கு அவர்கள் வேறு அதிகாரிகளை கூட பணிய அமர்த்த வில்லை என்ற சூழலில் பொதுமக்கள் அவதி உற்று வருகின்றனர். இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் முன் வைத்து வருகின்றனர்.

ஒரு அதிகாரி விடுப்பு எடுத்து இருந்தால் அந்த இடத்திற்கு வேறு அதிகாரிகளை பணிய அமர்த்தி இருக்க வேண்டும். அந்த அதிகாரி விடுப்பு முடிந்து வரும் வரை பொது மக்களை நாள்தோறும் அலைகழிப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்விகளையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி