இளைஞர் கொலை வழக்கில் இருவர் கைது. போலீசார் விசாரணை

64பார்த்தது
*திருப்பத்தூர் அருகே சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் மரணம். இரண்டு இளைஞர்களை கைது செய்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை. *

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 31 வது வார்டு ஔவை நகர் பகுதியில் வசிப்பவர்கள் மணி இவரது மனைவி செல்வி.

விறகு வெட்டும் கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு ஏழு பிள்ளைகள் உள்ள நிலையில் இவரது ஆறாவது மகன் பழனிவேல் (22) நிற்க முடியாத அளவிற்கு போதையில் இருப்பதாக கூறி இரவு 12 மணிக்கு வீட்டின் கதவைத் தட்டி அதே பகுதியில் வசிக்கும் அருள் மகன் சந்துரு ஆறுமுகம் மகன் மோகன் ஆகிய இருவரும் பழனிவேலின் பெற்றோரிடம் கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில் தன் பிள்ளைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பதறிய பெற்றோர் பழனிவேலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விரும்பியதால் மோகன் சந்துரு இருவரும் பழனிவேலை தூக்கிக்கொண்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் பழனிவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து சந்துருவும் மோகனும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி