+1ல் விரும்பிய பாடம் கிடைக்காததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

62பார்த்தது
வேலூர்மாவட்டம், காட்பாடி தாலுகா திருவலம் அடுத்த காரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சம்பத் இவர் விவசாயி இவரது மகன் சர்வேஷ் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 351 மதிப்பெண்களை பெற்றிருந்தார். மாணவன் அதே பள்ளியில் விரும்பிய பாடப்பிரிவை கேட்டுள்ளார். ஆனால் மதிப்பெண் குறைவாக உள்ளதால் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் 11 ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு எழுத செல்லாமல் வீட்டிலேயே மன உளைச்சலில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் வீட்டில் இருந்த ஊஞ்சல் மாட்டும் கொக்கிள் மாணவர் சர்வேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நிலத்திலிருந்து வீட்டுக்கு வந்த மாணவரின் பெற்றோர்கள் மாணவனை அழைத்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது சர்வேஷ் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார் உடனடியாக அவரை மீட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து திருவலம் காவல் நிலையத்தில் மாணவரின் தந்தை சம்பத் புகார் அளித்துள்ளனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி