ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 18) வெற்றி பெற வேண்டிய போட்டியில்
சிஎஸ்கே அணி தோல்வியடைந்தது.
சிஎஸ்கே அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறியது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய
சிஎஸ்கே 20 ஓவரில் 191 ரன்களுக்கு சுருண்டது. ரச்சின் ரவீந்திரா 61 ரன்களும், ரஹானே 33 ரன்களும் எடுத்தனர். இறுதியில்
தோனி (13 பந்துகளில் 25), ஜடேஜா (22 பந்துகளில் 42) போராடியும் பலனில்லை.