முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று (மே 19) ஏராளமான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான திருமண ஜோடிகள் குவிந்தனர். தொடர்ந்து, 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளன.