பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய 3 பேர் கைது

3229பார்த்தது
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் முடினாம்பட்டு பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கினை நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி. கடந்த 24 ஆம் தேதி நள்ளிரவில் பெட்ரோல் பங்க்கில் பணிபுரிபவர் மதன். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் பெட்ரோல் நிரப்ப வந்தபோது இளைஞர் வாகனத்தில் அளவுக்கு அதிகமாக பெட்ரோல் நிரப்பியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் நேற்று நள்ளிரவு மதன் வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த போது, மூன்று மர்ம நபர்கள் மதுபோதையில் வந்து, ஊழியர் மதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகார்படி கே வி குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து, பெட்ரோல் பங்கில் பதிவான 'சிசிடிவி' கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.

ஊழியர் மதனை தாக்கியவர்கள் முனியாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரஜினி, 48, ராஜசிம்மன் 32 கபிலன், 50, என தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்பு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி