ஆற்காடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கருட சேவை விழாவை தொடர்ந்து, ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு பூஜை செய்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி நரசிம்மரை வழிபட்டனர். இவ்விழாவில் உபயதாரர்கள் எம். ஜி. வேலு, ஏசிகே. சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.