சோளிங்கர் அருகே கல்லூரி மாணவனுக்கு கத்தரிக்கோல் குத்தி பலி!

558பார்த்தது
சோளிங்கர் அருகே கல்லூரி மாணவனுக்கு கத்தரிக்கோல் குத்தி பலி!
சோளிங்கர் ஒன்றியம் கல்லாலங்குப்பம் கிரா மத்தை சேர்ந்தவர் சுனில் (வயது 18). இவர் கலவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில் வீட்டில் உள்ள கட்டிலில் படுத்திருந்த அவர் கீேழ விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது தரையில் தலையணை மீது இருந்த கத்தரிக்கோல் சுனில் மார்பில் குத்தி உள்ளது.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோ தனை செய்த மருத்துவர்கள் சுனில் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி