டிராக்டரில் சிக்கி தந்தை கண் முன்னே 11 வயது மகள் பலி

59பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், தனது விவசாய நிலத்தை உழுவதற்காக டிராக்டரின் பின்பக்கம் ரொட்டேட்டரைப் பொருத்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த அவரது 11 வயது மகள் ஜெனிகா, தனது தந்தையுடன் டிராக்டரில் அமர்வதற்காக அந்த ரொட்டேட்டரில் கால் வைத்து ஏற முயன்றுள்ளார். இதனை கவனிக்காத தந்தை ரொட்டேட்டரை இயக்கவே, சிறுமி அதில் சிக்கி படுகாயமடைந்து உயிரிழந்தார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி