இருதரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு

77பார்த்தது
இருதரப்பினர் மோதல்; 4 பேர் மீது வழக்குப் பதிவு
ராணிப்பேட்டை ஏகாம்பரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 57). இவர் கத்தாரிக்குப்பத்தில் இருந்து ஏகாம்பரநல்லூர் செல்லும் சாலையில் ஏரிக்கரையை ஒட்டியுள்ள கரும்பு தோட்டம் பகுதியில் சென்றபோது, ராஜ்கிரண் என்பவர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் தாக்கிக் கொண்டனர்.

இதில், முருகானந்தம், அவரது தம்பிகள் அன்பு, ஹரி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ராஜ்கிரண், சக்திவேல், இளையராஜா, ரவி ஆகிய 4 பேர் மீது சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி